மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகள் குறித்த குற்றச்சாட்டுகளை நாமக்கல் எம்.பி நிரூபிக்கவில்லை எனில் அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடரப்படும் என்று அமைச்சர் தங்கமணி எச்சரித்தார். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளான ஜனதாநகர் , ஆவாரங்காடு உள்ளிட்ட இடங்களில் வசித்து வந்த 715 குடும்பங்கள் தங்குவதற்கு நில ஒதுக்கீடு செய்து அதற்கான ஆணைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் 338 குடும்பங்களுக்கு மண்கரடு பகுதியில் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலத்தை 338 குடும்பங்கள் குடியிருப்பதற்கு ஏற்றார்போல் […]
