ஓமலூர் அருகே காதல் திருமணம் செய்துகொண்ட பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓமலூர் அருகே உள்ள பாகல்பட்டி ராமானூர் காலனியை சேர்ந்த தங்கவேல் என்பவரின் மனைவி வள்ளி. இவர்களுக்கு திவ்யா என்ற மகள் உள்ளார். இவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ஜெகதீஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் தனது கணவர் வீட்டில் திவ்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஓமலூர் […]
