விருதுநகர் மாவட்டத்தில் வெள்ளையாபுரம் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் நாட்டு நல பணித்திட்டம் சிறப்பு முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் தலைமை தாங்கியுள்ளார். மேலும் இந்த முகாமில் டி.மீனாட்சிபுரம் பகுதியில் மியாவாக்கி குறுங்காடுகள் அமைப்பதற்காக மரக்கன்றுகள் நடும் பணியும் பள்ளியில் காய்கறி தோட்டம் அமைக்கும் பணியும் நடைபெற்றுள்ளது. அது மட்டுமல்லாமல் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலமும் பள்ளி மாணவர்களால் நடத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் வெள்ளையாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் நாராயணன், […]
