அகதி ஒருவரை உள்ளூர் அதிகாரிகள் நாடுகடத்த உத்தரவிட்டதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பங்களாதேஷிலிருந்து அகதி ஒருவர் துன்புறுத்தலிலிருந்து தப்பி கடந்த 2011-ம் வருடத்தில் பிரான்சிற்கு வந்துள்ளார். மேலும் அவருக்கு மருத்துவ பிரச்சனைகள் இருப்பதால் தற்காலிகமாக Toulous என்ற இடத்தில் வாழிட உரிமம் பெற்று வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2017 ஆம் வருடத்தில் புலம்பெயரும் அலுவலர்களுக்கு ஆலோசனை கூறும் மருத்துவர்கள், அந்த நபருக்கு ஆஸ்துமா பிரச்சனைகள் இருப்பதால் பங்களாதேஷில் சிகிச்சை பெற அனுமதித்துள்ளனர். […]
