சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமையகத்தில் வைத்து சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமத்தின் முதல் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது, சென்னையில் உள்ள போக்குவரத்து நெரிசல் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். எனவே பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த வேண்டியது நம்முடைய கடமை. உலகத் தரம் வாய்ந்த போக்குவரத்து சென்னையில் அமைய வேண்டும். அதன்பிறகு […]
