விசாரணைக்கு ஆஜராக வந்த சமயத்தில் கலவரத்தை தூண்டியதால் நவாஸ் ஷெரீப் மகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ் (46), தற்போது பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் துணைத்தலைவராக இருந்து வருகிறார். அவர் சட்ட விரோதமான முறையில் நிலம் கைப்பற்றியதாக புகார் எழுந்ததுள்ளது. அது பற்றி அவரிடம் விசாரணை மேற்கொள்வதற்கு லாகூரில் லஞ்ச ஊழல் தடுப்பு படையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். அவர் சென்ற 11-ஆம் தேதி அங்கு […]
