வீட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பை தீயணைப்பு துறையினர் பத்திரமாக பிடித்தனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் பகுதியில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். அவரது வீட்டிற்குள் நேற்று நல்ல பாம்பு ஒன்று புகுந்து அலமாரியில் பதுங்கி இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அலறி அடித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே ஓடிவந்தனர். இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நல்ல பாம்பை பத்திரமாக பிடித்தனர். இதனையடுத்து வனத்துறையினரிடம் […]
