ஓய்வு பெற்ற ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை காவல் கண்காணிப்பாளர் திரு. நல்லம்ம நாயுடு அவர்களின் மறைவுக்கு மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்த நல்லம்ம நாயுடு இன்று சென்னை பெரவள்ளூரில் உள்ள அவரது இல்லத்தில் வயது மூப்பின் காரணமாக காலமானார்.. அவருக்கு வயது 83.. 1961 ஆம் ஆண்டு காவல் உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்து, பின் லஞ்ச ஒழிப்புத் துறையில் […]
