தமிழ்நாட்டில் விரைவில் 708 நலவாழ்வு மையங்கள் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட வளசரவாக்கம் பகுதிகளில் ரூபாய் 2.37 கோடி மதிப்பில் மழை நீா் வடிகால் அமைக்கும் பணிகளை அமைச்சா் மா.சுப்ரமணியன் கடந்த வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். இதையடுத்து அமைச்சர் செய்தியாளா்களிடம் பேசியதாவது “சென்னையைப் பொருத்தவரையிலும் மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி நிா்வாகத்துறையின் சாா்பாக சுமாா் ரூபாய் 4,749 கோடி மதிப்பில் வெள்ளத்தடுப்பு பணிகளுக்கான நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு […]
