“அரசாங்கம்தானே அன்னதானம் போடுது, உங்க வீட்டுக் கல்யாண சாப்பாடு போடற மாதிரி அடிச்சு விரட்டறீங்க” என்ற கேள்வியெழுப்பி அனைவரின் கவனத்தையும் பெற்ற நரிக்குறவ பெண்மணி அஸ்வினியின் குற்றச்சாட்டுகளுக்கு இதுவரையிலும் முடிவுவரவில்லை. சமூகவலைதளம் வாயிலாக தனக்கு ஏற்பட்ட அநீதி பற்றி, மகாபலிபுரம் பூஞ்சேரி பகுதியை சேர்ந்த அஸ்வினி என்ற நரிக்குறவர் இன பெண் வீடியோ வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளம் முழுவதும் வைரலாகியது. இதையடுத்து சென்ற வருடம் தீபாவளி அன்று தமிழக முதலவர் அந்த பகுதிக்கு […]
