செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க தலசயனப் பெருமாள் கோவிலில் மதிய அன்னதானம் அரசால் வழங்கப்படுகிறது. இதில் கலந்துகொள்ளச் சென்ற நரிக்குறவ பெண்ணான அஸ்வினியை கோவில் ஊழியர்கள் தரைகுறைவாக பேசி சாப்பிட விடாமல் திருப்பி அனுப்பியதால் அந்தப்பெண் தனக்கு நேர்ந்த அவமானத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். இதன் விளைவாக நேற்று அனைவருக்கும் சமபந்தி விருந்து அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொண்ட இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆலயத்தை ஆய்வு செய்து பின்னர், […]
