திருமண நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு பெண் கிணற்றில் பிணமாக மிதந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், மானூர் தாலுகாவில் இருக்கும் நரிக்குடி பகுதியை சேர்ந்தவர் பெருமாள் சாமி. இவர் கேரளாவில் இரும்பு கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இவருடைய இளைய மகளான 23 வயதுடைய தங்கதுரைச்சிக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் தங்கதுரைச்சி அவரது தாயாரிடம் கிணற்றுக்கு சென்று குளித்து வருவதாக கூறி சென்றுள்ளார். […]
