இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியைக் காரணம் காட்டி எதிர்க்கட்சிகள் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். அதோடு மட்டுமில்லாமல் அதிபருக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான எஸ்.ஜே.பி. கட்சி நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில் நேற்று சபாநாயகர் மகிந்த யாபா அபயவர்தனா நாடாளுமன்ற கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது கட்சி தலைவர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த விவாதம் மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். பின்னர் இந்த […]
