தமிழக்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து அரசு துறைகளில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள ஊரகப்பகுதிகளில் மூன்றில் ஒரு பங்குடன் மக்கள் பங்களிப்புடன் நமக்கு நாமே திட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், பத்தாண்டுகளுக்கு பிறகு நமக்கு நாமே திட்டம் 100 கோடி ரூபாய் மதிப்பில் மீண்டும் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நவீன வகுப்பறைகள், ஆய்வகங்கள், சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்படும் […]
