சபரிமலை கோயிலில் நாளை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் புரட்டாசி மாதத்திற்கான பூஜைக்கு நாளை மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைக்கிறார். அங்கு வரும் 21ஆம் தேதி வரை கோவிலில் பூஜைகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், உஷ […]
