கஞ்சா கடத்திய 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள நடேசா பெட்ரோல் பங்க் பிரிவு ரோடு அருகே துணை போலீஸ் சூப்பிரண்டு பெனாசிர் பாத்திமா மற்றும் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக நடந்து சென்ற 3 வாலிபர்கள் காவல்துறையினரை கண்டதும் தப்பிசெல்ல முயற்சி செய்தனர். இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் 3 வாலிபர்களையும் கையும் களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர்கள் கேரள பாலக்காடு மாவட்டம் […]
