தன்னுடன் வாழ மறுத்த கணவரை காதல் மனைவி தர்ம அடி கொடுத்து அழைத்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் எம்.பி.ஏ பட்டதாரி ஒருவர் வசித்து வருகிறார். அவர் பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த போது அவருக்கும் அவருடன் வேலை பார்க்கும் காரைக்குடி பகுதியை சேர்ந்த இளம்பெண்ணிற்கும் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. அதன்பின் இருவரும் சேர்ந்து பல இடங்களுக்கு ஒன்றாக சுற்றி உள்ளனர். இந்நிலையில் இளம்பெண் […]
