குன்னூர் அருகே பழங்குடியின மக்கள் எவ்வித அடிப்படை வசதியும் இல்லாமல் தவித்து வருகின்ற நிலையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் தாலுகாவிற்கு உட்பட்ட உலிக்கல் பேரூராட்சியில் குரங்குமேடு கிராமம் உள்ள நிலையில் சென்ற 25 வருடங்களாக வசித்து வரும் பழங்குடியின மக்கள் தேயிலை விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு தொழிலை செய்து வருகின்றார்கள். இவர்களுக்கு அடிப்படை வசதிகளான மின்சாரம், சாலை, குடிநீர் எந்த அடிப்படை வசதியும் இல்லை. […]
