கள்ளக்காதலியின் கணவரை கொலை செய்த அரசு பேருந்து நடத்துனருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அடுத்துள்ள இதம்பாடல் பகுதியில் தர்மர் (வயது 40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பாண்டியம்மாள் (32) என்ற மனைவியும், தர்மபார்த்தசாரதி என்ற மகனும், கார்த்தீஸ்வரி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு இருசக்கர வாகனத்தில் வெளியே சென்ற தர்மர் திடீரென மாயமானதாக அவரது தங்கை ஏர்வாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த […]
