தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. பொதுத்தேர்வில் நடத்தப்படாத பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தால் grace marks வழங்குவது தொடர்பாக ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் நீட் தேர்வுக்கு தனியே பயிற்சி வழங்கப்படாது. பள்ளிகளிலேயே மாணவர்களை போட்டித்தேர்வுக்கு தயார் படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். இதனால் மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
