திருப்பத்தூர் மாவட்டத்தில் வீட்டின் பூட்டை உடைத்து பணம் மற்றும் நகையை கொள்ளையர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தேங்காய்ஜிட்டி குருமன்ஸ் வட்டம் பகுதியில் சுந்தரவேலு மற்றும் அவரது மனைவி விஜி வசித்து வருகின்றனர். இதில் சுந்தரவேலு என்பவர் ஓசூர் பகுதியில் தங்கி பணிபுரிந்து வருகின்றார். இவருடைய மனைவி ஒரு மாதத்திற்கு முன்பு பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது விஜிக்கு ஆண் குழந்தை பிறந்து இறந்துவிட்டது. இதனால் மனமுடைந்த விஜி […]
