சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் வங்கி ஊழியருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை தியாகிகள் சாலையில் வங்கி ஒன்று இயங்கி வருகிறது. அந்த வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றும் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சிகிச்சைக்காக அந்த ஊழியர் அழைத்துச் செல்லப்பட்டார். மேலும் வங்கியை நகராட்சி ஆணையாளர் ஜெகநாதன் உடனடியாக ஒரு நாள் மூடுவதற்கு உத்தரவு பிறப்பித்தார். இதனைத்தொடர்ந்து சுகாதாரத்துறை ஊழியர்கள், நகராட்சி சுகாதார ஆய்வாளர் […]
