ராமநாதபுரம் மாவட்டத்தில் கடைக்கு சென்ற பெண்ணிடம் நகையை பறிக்க முயன்ற நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகில் உள்ள காளிதாஸ் பள்ளி தெருவில் கமலம்(55) என்பவர் வசித்து வந்துள்ளார் இவர் அப்பகுதியில் வடை, பஜ்ஜி போன்றவை சுட்டு விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று கமலம் கடைக்கு செல்வதற்க்காக அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது 2 மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்து கமலம் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறிக்க […]
