வீட்டிற்கு சென்று கொண்டிருந்த பெண்ணை ஆட்டோவில் கடத்தி சென்று நகைகளை பறித்த மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் போடி பகுதியில் உள்ள வடக்கு ரத வீதியில் ராஜராஜேஸ்வரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள பெருமாள் கோவில் தெருவில் இருக்கும் அவரது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து அங்கிருந்து மீண்டும் வீட்டிற்கு அப்பகுதி வழியாக ராஜேஸ்வரி நடந்து சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ஆட்டோவில் 2 மர்மநபர்கள் ராஜேஸ்வரியை பின்தொடர்ந்து சென்று அவரை […]
