மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 27 பவுன் நகை மீட்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகே இருக்கும் ஒரு நகைக்கடையில் சுமார் 80 பவுன் நகைகள் திருட்டுப் போன நிலையில் இது குறித்த புகாரின் பேரில் பள்ளபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்கள். இதில் கடையில் விற்பனை பிரதிநிதியாக வேலை செய்த தீபக் என்ற இளைஞர் நகைகளை திருடியது தெரிந்தது. இதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டார்கள். […]
