வீட்டின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்து 16 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போரூர் பகுதியில் செல்வி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிளஸ்-2 படிக்கும் வினோத்குமார் மற்றும் பிளஸ்-1 படிக்கும் தினகரன் என்ற இரு மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று அதிகாலை செல்வி எழுந்து தனது விட்டு வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்தார். அப்போது திடீரென வீட்டிற்குள் பயங்கரமான சத்தம் கேட்டுள்ளது. இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த செல்வி […]
