கொரோனா பாதித்த மாமனாரை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக மருமகள் தனது தோளில் சுமந்து சென்ற சம்பவம் நெகிழச் செய்துள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் கோரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. பல மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாத காரணத்தினால் ஆம்புலன்ஸில் நோயாளிகள் காத்திருக்க வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. இதனால் உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ்கள் நோயாளிகளை அழைத்துச்செல்ல முடியவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அசாம் மாநிலம் பாட்டிகவானில் என்ற பகுதியில் வசித்து வருபவர் துலேஷ்வர் தாசு. இவரது மகன் சூரஜ். […]
