வனப்பகுதிக்குள் கும்கி யானையின் உதவியால் விரட்டப்பட்ட யானை மீண்டும் தோட்டத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள மல்குத்திபுரம் கிராமத்தில் விவசாயியான திருமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் நள்ளிரவு 12 மணியளவில் கருப்பன் என்ற காட்டுயானை வனப்பகுதியில் இருந்து வெளியேறி திருமூர்த்தியின் வாழைத் தோட்டத்திற்குள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழைகளை மிதித்தும் தின்றும் சேதப்படுத்தியது. இந்நிலையில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த திருமூர்த்தி திடீரென தோட்டத்தில் சத்தம் கேட்டதால் திடுக்கிட்டு எழுந்து ஜன்னல் வழியாக […]
