தோட்டக்கலை அலுவலர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள டி.ஆர்.நகர் பகுதியில் லோகேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெள்ளகோவில் தோட்டக்கலை அலுவலகத்தில் உதவி தோட்டக்கலை அலுவலராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு திருமணம் நடைபெற்று 7 மாதங்கள் ஆகிறது. இந்நிலையில் லோகேஷ் செம்மாண்டம்பாளையம் பகுதியில் வாயில் நுரை தள்ளிய நிலையில் கீழே விழுந்து கிடந்துள்ளார். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் தோட்டக்கலை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் […]
