ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தொழிலாளி தீக்குளிக்க முயன்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசலை சேர்ந்த தமிழரசன் என்பவர் ஈரோடு மாநகராட்சி பாதாள சாக்கடை திட்ட பணியை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரரிடம் தொழிலாளியாக வேலை செய்து வருகின்ற நிலையில் இவர் ஈரோடு நாச்சியப்பா வீதியில் சக தொழிலாளர்களுடன் தங்கியிருக்கின்றனர். இந்த நிலையில் சென்ற வாரம் ஒப்பந்ததாரரின் கணக்காளருக்கும் இவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக வாக்குவாதமும் ஏற்பட்டதையடுத்து கைகலப்பில் […]
