திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை அருகே கூலித்தொழிலாளியை மிக மோசமாக தாக்கிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பொத்தகணவாய்பட்டியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மேகலா என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. இதை குமாரிடம், அதே பகுதியில் வசித்து வரும் மேகலாவின் உறவினரான கூலித்தொழிலாளி செல்லையா தட்டி கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த குமார் அவருடைய தாத்தா சின்னக்காளை, அவரது தந்தையான […]
