தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் பள்ளிவாசல் தெருவில் கூலி வேலை பார்க்கும் அக்கீம்(59) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் சாலையோரம் இருந்த திண்ணையில் படுத்துக்கொண்டு செல்போனில் பாட்டு கேட்டுக் கொண்டே மது பாட்டில்களை சாலையில் அடுக்கி வைத்துள்ளார். இதனை தட்டி கேட்டவர்களிடம் அக்கீம் தகராறு செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மது பாட்டில்களை பறிமுதல் செய்து அக்கீமிடம் விசாரித்தனர். இதனையடுத்து போலீசார் அவரை எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். […]
