தொழிலாளியை மது பாட்டிலால் குத்தியவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓடக்கரை பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்ணன் என்ற மகன் உள்ளார். மேலும் தொழிலாளியான இவர் தைக்காபுரத்தில் பதநீர் காய்ச்சும் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கண்ணன் பதநீர் காய்ச்சும் வேலையை முடித்துவிட்டு சக தொழிலாளியான ஹரிராம் கிருஷ்ணனுடன் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் செந்தில்வேல் என்பவர் மோட்டார்சைக்கிளில் வேகமாக சென்றுள்ளார். இதனை […]
