கிணற்றில் பிணமாக மிதந்த வழக்கில் உறவினர்கள் தொழிலாளியின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அலங்காரப்பேரி பகுதியில் முத்துராமலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். கடந்த 2-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற முத்துராமலிங்கம் திரும்பி வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த உறவினர்கள் முத்துராமலிங்கத்தை பல்வேறு இடங்களில் தேடி பார்த்த போது அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் தோட்டத்து கிணற்றில் அவர் பிணமாக […]
