தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறிக்க முயன்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிபாளையம் பகுதியில் சபரி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சபரி பனியன் நிறுவனத்தில் இருந்து வீட்டிற்கு இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி சாலை வழியில் செல்போனில் பேசிக்கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் […]
