9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித்தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்பளித்துள்ளார். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் தங்கசாமி என்ற நியூட்டன் என்பவர் வசித்து வருகிறார். கூலித்தொழிலாளியான இவர் கடந்த 2020ஆம் ஆண்டில் அதே பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமியை கத்தியை காட்டி மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனையறிந்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக ஆண்டிபட்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் […]
