புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தமிழகம் கையாளும் நிலை மோசமாக உள்ளது என உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மலைக்கண்ணு என்பவர் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கொரோனா தொற்று காரணமாக தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பல்வேறு தொழில்கள் முடங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இதனால் வட மாநிலங்களில் இருந்து வந்து பணிபுரிந்த தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். […]
