தொலைதூர கல்வி இயக்ககம் நடத்தும் படிப்புகள் குறித்து விரைவில் சுமூக தீர்வு எட்டப்படும் என அண்ணாமலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் வரலாற்று சிறப்புமிக்க பழமைவாய்ந்த பல்கலைக்கழகமாக அண்ணாமலை பல்கலைக்கழகம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த பல்கலைக்கழகம் சமீபத்தில் அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் இந்த பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தொலைதூர கல்வி மூலம் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் பல்கலைக்கழக மானியக்குழு சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2015ஆம் ஆண்டிற்கு பின் தொலைதூர […]
