தொப்பூர் கணவாயில் சாலையோர பள்ளத்தில் லாரி பாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து நாமக்கல் மாவட்டத்திற்கு சிமெண்ட் பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி புறப்பட்டது. இதனையடுத்து தர்மபுரி மாவட்டத்திலுள்ள தொப்பூர் கணவாய் வழியாக லாரி வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை மதுரையில் வசித்து வரும் மனோகரன் என்பவர் ஒட்டி வந்தார். இந்நிலையில் தொப்பூர் கணவாய் முதல் வளைவை கடந்தபோது டிரைவர் தன் கட்டுப்பாட்டை இழந்ததால் லாரி சாலையோரம் உள்ள சுமார் 30 […]
