சூயிங்கம் தொண்டையில் போய் சிக்கி 2 1/2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள பொத்தனூர் தண்ணீர் பந்தல் மேடு பகுதியில் இளவரசன் என்பவர் அவரது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு விடுதியில் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர்களுக்கு இரண்டரை வயதில் உஷாரிகா என்ற பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று உஷாரிகா சூயிங்கம் மிட்டாய் சாப்பிட்டுள்ளார். அப்போது அந்த […]
