அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதுக்கு எதிராக அதிமுக தொண்டர் ஒருவர் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு அதிமுகவினர் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாசாலை அருகே அதிமுகவினர் கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பியுள்ளனர். […]
