மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற முடிவு செய்துள்ளது. இதற்கான நடைமுறைகள் பாராளுமன்ற கூட்டத்தொடரில் தொடங்கும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மேலும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் வீடுகளுக்கு திரும்ப வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இதையடுத்து விவசாயிகள் உற்சாகமாக இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். சிங்கு எல்லையில் போராட்டம் நடத்திய விவசாய சங்க நிர்வாகிகள் மகிழ்ச்சியில் நடனம் ஆடுகின்றனர். மேலும் பெரும்பாலான விவசாயிகள் போராட்டத்தை முடித்து விட்டு […]
