தேனி மாவட்டத்தில் உள்ள ஹைவேவிஸ் மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள ஹைவேவிஸ் மலைப்பகுதியில் மிகவும் அழகிய சுற்றுலா தலமாக சுருளி அருவி விளங்கி வருகின்றது. இந்நிலையில் கடந்த 2 வருடங்களாக கொரோனா காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. தற்போது கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் அருவில் குளிக்க அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து கடந்த 2 நாட்களாக ஹைவேவிஸ் மலைப்பகுதியில் […]
