தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கணினி பயிற்றுனர்களுக்கு ரூ.10,000 தொகுப்பூதியம் வழங்க உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கணினி பயிற்றுனர்களுக்கு இதுவரை மாத தொகுப்பூதியமாக 4,000 வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், மாத தொகுப்பூதியம் 10,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. கணினி அறிவு பயிற்சி திட்டத்தின்கீழ் கலை, அறிவியல் கல்லூரிகளில் 423 பயிற்றுனர்கள் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு ஒரு கல்வியாண்டில் 11 மாதங்களுக்கு தொகுப்பூதியம் வழங்கப்படும்.
