கார் கட்டுபாட்டை இழந்து இருசக்கர வாகனம் மீது மோதியதில் தையல் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் அச்சுந்தன்வயல் பகுதியில் வசித்து வந்த முருகானந்தம்(44) தையல் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இவர் தனது இருசக்கர வாகனத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் திடீரென கட்டுபாட்டை இழந்து இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் பலத்தகாயமடைந்த முருகானந்தத்தை மீட்டு அக்கம்பக்கத்தினர் ராமநாதபுரம் அரசு […]
