எம்பிபிஎஸ் படிக்கும் மாணவி தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டம் பெரம்பூரில் உள்ள வாஞ்சிநாதன் தெருவில் வசிக்கும் தம்பதியினர் சீனிவாசன்-வசந்தா. இவர்களுடைய மகள் சீசா(22). இவர் தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் இறுதி வருடம் படித்து வந்துள்ளார். எனவே சீசா மதகடிப்பட்டு பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தன் தாயாருடன் தங்கி இருந்து கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் சீசா, சம்பவத்தன்று வழக்கம் போல் சாப்பிட்டு விட்டு தனது […]
