தமிழகத்தில் மாண்டஸ் புயலின் காரணமாக அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுகள் மற்றும் அதற்கு கீழ் இயங்கும் கல்லூரிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தேர்வு நடைபெறும் மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் தற்போது தேர்வு நடைபெறும் மறு தேதியை அறிவித்துள்ளது. அதன்படி டிசம்பர் 9-ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் டிசம்பர் 24-ஆம் தேதி சனிக்கிழமை அன்று காலை மற்றும் மதியம் என இரு சுழற்சிகளில் நடைபெறுகிறது. […]
