சென்னையில் தேர்வுத்துறை இயக்குனரின் உதவியாளருக்கு ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தேர்வுத்துறை இயக்குனர் மற்றும் அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து இயக்குனர் உஷாராணி தேர்வுத்துறை அலுவலகத்தை உடனடியாக மாற்றினார். தேர்வுத்துறை வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இதனால் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவதற்கு தேர்வுத்துறையினர் அச்சம் என தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் பணிபுரியும் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி […]
