பிரசித்தி பெற்ற கோவிலின் தேர்த்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டி நொண்டிமேடு பகுதியில் உள்ள மீனாட்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 11-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு கடந்த 12-ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையடுத்து நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. […]
