இமாச்சலபிரதேசத்திலுள்ள 68 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வருகிற 12ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து டிசம்பர் 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. அம்ம்மாநிலத்தில் ஆட்சியைத் தக்கவைக்கும் நோக்கில் பா.ஜ.க தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறது. அதிலும் குறிப்பாக பொதுசிவில் சட்டம் நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியங்களை ஆய்வு மேற்கொள்ள குழு அமைக்கப்படும் என வாக்குறுதியை அளித்து தேர்தலை சந்தித்து வருகிறது. அதே சமயம் காங்கிரஸ் கட்சியும் தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. இதுவரையிலும் இமாச்சலபிரதேசத்துக்கு […]
